Tuesday, August 6, 2019

காதல் செய்..!

கட்டுக்கடங்காமல் காதல் செய்..
இந்த நொடி பொழுதில் உன்னுடன் நான் இருக்கிறேன், உனக்காக நான் இருக்கிறேன்,
இங்கு இது தான் சரி தவறு என்று நான் எதையும் வரையறுக்கவில்லை,
ஆழிச்சுழி ஆட்கொண்டவள் போல் உன்னுள் மூழ்கி தொலையவே அவா..!
உன் அதுரம் சிந்தும் அமுதினை என் நாவினால் ருசிக்கவும்,
உன் காதல் களத்தின் காயங்களை இமைகளால் வருடவும் இதுவே தருணம்...
விதிவிலக்கு மட்டுமே இங்கு விதி,
காற்றாய், கடலாய், வானாய், விண்மீனாய் எல்லையின்றி காதல் செய்...
கட்டுப்பாடின்றி ஆதி மனிதன் போல் காமத்தின் வழி காதல் செய்..!

No comments:

Post a Comment